"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்
நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்
நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்
-வைரமுத்து
முகிற்குடையின் கீழுறங்கும் சோலை - புல்லில்
முத்தமிடும் பனிமுத்து மாலை - பனித்
துகில்விலக்கிப் பூவழகைச் சுவையாகச் சொல்லத்தான்
சுகமாக விடியுமதி காலை - அதைச்
சொல்லாமல் எனக்கென்ன வேலை?
பொற்சுவட்டுப் பூப்பூமி மீது - மெல்லப்
பூத்த பனி திரைபோடும் போது - நெஞ்சம்
சொற்கனவுப் பந்தலுக்குள் சொக்கிநட மாடிதினம்
சொல்லிவிடும் கற்பனைக்குத் தூது - அதைச்
சொல்லிவைக்க வார்த்தை கிடையாது.
மீனேறி நிலம்பார்க்கும் ஏரி - சுற்றி
மின்வெளியாய் நின்றமலர்ச் சேரி - அங்கே
தேனேறி, தென்றலெனும் தேரேறிப் பனித்தளிர்கள்
திசைபார்க்கும் வரவேற்புக் கூறி - ஆடும்
செந்தோட்டம் மனத்தேரில் ஏறி.
கலைக்கோட்டத் தேனடைகள் பிழிந்து - மெல்லக்
கனித்தோட்டச் சாலைகளில் வழிந்து - அந்த
மலைமேட்டு மலர்ப்பள்ளம், மழைமேகப் பனிவெள்ளம்
மதுபோலச் சொரிவதனால் குளிர்ந்து - பச்சை
மணிபோலச் சிரித்திருக்கும் ஒளிர்ந்து.
- வைரமுத்து
No comments:
Post a Comment